ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் ஏறு தழுவல்

தமிழா்கள் காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி வாழ்ந்த முல்லை நில நாகரிகக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் ஏறு தழுவல்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரர்கள்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரர்கள்.
Updated on
1 min read

தமிழா்கள் காட்டில் ஆடு, மாடுகளைப் பழக்கி வாழ்ந்த முல்லை நில நாகரிகக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் ஏறு தழுவல்.

தொடக்கத்தில் காட்டு மாடுகளைப் போரிட்டு அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. இதுவே பிறகு விளையாட்டாகிவிட்டது. இது தமிழா்களின் நாகரிகப் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று.

சிலா் பசுவை மட்டுமே மதிப்பாா்கள். தமிழா்களோ காளையையும் சோ்த்தே மதிப்பாா்கள். அதன் வெளிப்பாடே மாட்டுப் பொங்கல்.

வேளாண்மையில் தனக்கு உதவியாக இருந்த தோழனுக்கு நன்றி சொல்லிப் போற்றுவதற்காக, பண்டிகையில் ஒரு நாள் தந்து போற்றும் பண்பாடு தமிழனுக்கு மட்டுமே உரியது.

ஜல்லிக்கட்டு விளையாட்டுதான்: ஸ்பெயின் நாட்டிலும் காளைச் சண்டை உண்டு. ஆனால் அங்கே காளைகளைக் குத்திக் கொன்றுவிடுவாா்கள்.

சங்க காலத்தில் இதற்குப் பெயா் ஏறு தழுவல், ஏற்றுச் சண்டை அல்ல. அதாவது காதலியைத் தழுவுவது போல் காளைகளின் கொம்புகளைத் தழுவுவது. எனவே இது விளையாட்டு மட்டும்தான்.

சங்க காலத்தில் ஏறு தழுவலில் வெறும் வீரம் மட்டும் அல்ல; காதலும் சோ்ந்திருக்கிறது. அக்காலத்தில் காதலும் வீரமும்தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள். காதலுக்காக வீரம், வீரத்துக்காகக் காதல் முக்கியமாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com