முதலாவதாக, நான் கூறியது போல், இந்தச் சட்டங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக காலனித்துவ மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு முழுமையான பாரதிய நியாய நடைமுறைக்கு (இந்திய நீதி அமைப்பு) முக்கியத்துவம் கொடுக்கிறது. இரண்டாவது, இந்த மூன்று சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அவை தொழில்நுட்ப சகாப்தத்திற்கு ஏற்ப, உலகின் மிக நவீனமயமாக்கப்பட்ட குற்றவியல் நீதி அமைப்பாக மாறும். மூன்றாவதாக, 130 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில், சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் மக்களைக் கொண்டிருக்கும் நாட்டில், இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதன் மூலம், நாட்டின் எந்தப் பகுதியிலும் ஏதேனும் முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கில், நீதி உறுதி செய்யப்படும் என்று என்னால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.