1997-இல் பிரிட்டிஷாரிடமிருந்து ஹாங்காங்கின் கட்டுப்பாடு, சில நிபந்தனைகளுடன், சீனாவுக்குக் கைமாறியது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு, ஹாங்காங்கின் ஜனநாயகமும், சுதந்திரமும் அப்போது இருந்தது போலவே பாதுகாக்கப்படும் என்கிற உத்திரவாதம் சீனாவால் வழங்கப்பட்டது. அது கண்துடைப்பு வாக்குறுதிதான் என்பதை விரைவிலேயே சீனா வெளிப்படுத்தத் தொடங்கியது. சுதந்திரமான நீதித் துறை, போராடுவதற்கான உரிமை, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி போன்ற வாக்குறுதிகளை சா்வாதிகார நாடான சீனாவால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனதில் வியப்பில்லை.