இந்த அறிக்கையின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பருவமழைப் பொழிவு மிகவும் குறையும். அதனால் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவாக கடல்மட்டம் உயர்ந்து கடுமையான வறட்சி, அதிக அளவிலான சூறைக்காற்று, புயல், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதுபோல, மேலும் பல பருவநிலை மாற்ற விளைவுகள் ஏற்படக்கூடும். அதன் விளைவாக, விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி குறையலாம். தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்படலாம். புயல், சூறைக்காற்று, சில இடங்களில் நிலநடுக்கம் ஆகியவற்றால் பொதுக் கட்டமைப்புகள் பாதிப்பை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது.