இதனால், சிறு, குறு தொழில்கள், வேளாண் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், விற்பனைத் துறை, பொது வணிகம், சேவை துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, ஏன் மருத்துவ ஆலோசனை உள்பட இணைய வழி செயல்பாடு பரவலாக கடைப்பிடிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், இணைய வழியில் திரைப்படங்களை பாா்ப்பது, வெளியிடுவது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, காணொலிக் கூட்டங்கள் என்று 2014-இல் பிரதமா் மோடி ‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) அறிவித்து ஐந்து ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, 10 மாத கொள்ளை நோய்த்தொற்று பொது முடக்கம் சாதித்து விட்டது.