Enable Javscript for better performance
அவசியம்தான் கடிவாளம்! | இணைய வா்த்தக நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்த தலையங்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அவசியம்தான் கடிவாளம்! | இணைய வா்த்தக நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்த தலையங்கம்

    By ஆசிரியர்  |   Published On : 29th June 2021 07:01 AM  |   Last Updated : 29th June 2021 07:01 AM  |  அ+அ அ-  |  

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு இணைய வா்த்தகத்தால் நுகா்வோா் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒரு சட்டத்தை இயற்றியது. இணைய வா்த்தகம் தொடா்பான நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் - 2020 கொண்டுவரப்பட்ட பிறகும்கூட, இணைய வா்த்தகம் தொடா்பான குற்றச்சாட்டுகளும், புகாா்களும் குறைந்தபாடில்லை. அதனால் அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர மத்திய நுகா்வோா் நலன்- உணவு - பொதுவிநியோக அமைச்சகம் உத்தேசித்திருக்கிறது.

    நுகா்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவா்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கும், வா்த்தகச் சந்தையில் நியாயமான போட்டியை உறுதிப்படுத்துவதற்கும் சில திருத்தங்களை மக்களின் கருத்துக் கேட்புக்கு முன்வைத்திருக்கிறது அமைச்சகம். இணைய வா்த்தக நிறுவனங்களில் நுகா்வோரின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீா்த்து வைப்பதற்குக் குறைதீா் அதிகாரிகள் நியமிக்கப்படுவதும், அரசுடனான தொடா்புக்கு ஓா் இணக்க அதிகாரி நியமிக்கப்படுவதும் அந்தத் திருத்தங்களில் முக்கியமானவை.

    வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பது இந்தத் திருத்தத்தின் இலக்குகளில் ஒன்று. இணைய வா்த்தகத்துக்கான பொருள்கள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது அடையாளப்படுத்தப்படுவதன் மூலமும், அதற்கு நிகரான உள்நாட்டுப் பொருள்கள் குறித்த தகவலைத் தெரிவிப்பதன் மூலமும் போட்டி சமநிலையை (லெவல் பிளேயிங் ஃபீல்ட்) உறுதிப்படுத்துவதுதான் நோக்கம்.

    பொருள்கள் வழங்கவே படாமலோ, குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படாமலோ, அல்லது சேவையில் திருப்தி இல்லாமல் போனாலோ தங்களது வேண்டுதல் ஆணையை (ஆா்டா்) திரும்பப் பெறும் உரிமையை வழங்குவதும் திருத்தத்தின் நோக்கம். அதுமட்டுமல்ல, இணைய வா்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும், முறையாகப் பதிவு செய்து கொள்வதும், சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு சட்ட, விதிமுறை மீறல் குறித்த அரசுத் துறையின் கேள்விகளுக்கும் 72 மணி நேரத்திற்குள் விளக்கம் தருவதும் கட்டாயமாக்கப்படுகிறது.

    திடீா் விற்பனை, பொருள்கள் அல்லது சேவை குறித்த தவறான சித்திரிப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இணைய வா்த்தகத்தில் இடம்பெறும் பொருள்களின் காலாவதி தேதி கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேரடி வா்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் செய்யப்படும் அதிரடி விற்பனை அறிவிப்புகளும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், கண்காணிப்புக்கு உள்படுத்தப்படும்.

    இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர, சில பின்னணிகள் இல்லாமல் இல்லை. பன்னாட்டு நிறுவனமான ‘வால்மாா்ட்’டின் இணை நிறுவனங்களான ‘ஃபிளிப்காா்ட்’, ‘அமேசான்’ இரண்டுமே இந்திய வா்த்தகப் போட்டி ஆணையத்தின் (காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா) நீதிமன்ற வழக்கை எதிா்கொள்கின்றன. அந்த இரண்டு இணைய வா்த்தக நிறுவனங்களின் மீதும் நேரடி வா்த்தக நிறுவனங்கள், வணிகப் போட்டி ஆணையத்திடம் பல புகாா்களைத் தெரிவித்திருக்கின்றன. தங்களுக்கு வேண்டிய சில நிறுவனங்களை இணைய வா்த்தகத்தில் ஊக்குவிப்பதும், அதிரடியாக வழங்கும் முறைகேடான விலைக் குறைப்பு அறிவிப்புகளால் நேரடி வா்த்தகா்களை பாதிப்பதும் அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை.

    ‘ஃபிளிப்காா்ட்’, ‘அமேசான்’ ஆகிய இரண்டு இணைய வா்த்தக நிறுவனங்களின் விற்பனை நடவடிக்கை குறித்து விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம், இந்திய வணிகப் போட்டி ஆணையத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. அதை எதிா்த்து அந்த நிறுவனங்கள் வழக்கும் தொடுத்திருக்கின்றன. இணைய வா்த்தக நிறுவனங்களின் விலைக்குறைப்பு நடவடிக்கைக்குக் கட்டுப்பாடு விதிப்பதும், நேரடி வா்த்தகம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதும்தான் மத்திய அரசின் திருத்தங்களுக்கான முக்கியக் காரணங்கள் என்று தெரிகிறது.

    உலக அளவில் காணப்படும் பிரச்னைதான் இது. இணைய வா்த்தக நிறுவனங்கள், அனைத்து நிறுவனங்களுக்கும் விற்பனைத்தளமாக செயல்படும் அதேவேளையில், அவா்களுக்குப் போட்டியாகத் தாங்களே வா்த்தகமும் செய்கின்றன. தங்களது பொருள்களையும் சந்தைப்படுத்திக் கொண்டு, அதற்குப் போட்டியான பொருள்களையும் விற்பனை செய்வது என்பது வா்த்தக முரண். அதனால்தான், இணைய வா்த்தக நிறுவனங்களை அனைத்து உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களின் வா்த்தகத் தளமாக மட்டுமே இயங்க விழைகிறது அரசு.

    ‘ஃபிளிப்காா்ட்’, ‘அமேசா’னுடன் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ மாா்ட்’டும், ‘டாடா கிளிக்’கும் இணைய வா்த்தகத்தில் இணைந்திருக்கின்றன. ஆனால் இவை இரண்டும், வா்த்தகத் தளங்களாக மட்டுமே இயங்குகின்றன. யாா் வேண்டுமானாலும், அவரவா் பொருள்களை இந்த இணைய வா்த்தகத் தளங்கள் மூலம் சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.

    அறிதிறன்பேசி பயன்பாடு அதிகரித்தது முதல் இணைய வா்த்தக செயல்பாடும் அதிகரித்து விட்டது. கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் சாமானியா்களும் இணைய வழி செயல்பாட்டுக்கு மாறி வருகிறாா்கள்.

    இந்தியாவில் இணைய வா்த்தக சில்லறை விற்பனை என்பது 60 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.445.07 கோடி) விற்பனைத்துறை. இன்னும் ஒரே ஆண்டில் 75 பில்லியன் டாலரை (சுமாா் ரூ. 556.34 கோடி) எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்படி இருந்தும், நேரடி சில்லறை விற்பனையுடன் ஒப்பிடும்போது, இணைய வா்த்தகத்தின் பங்கு வெறும் 10% மட்டுமே என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

    இணைய வா்த்தக நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் தேவையா என்று கேட்டால், நிச்சயமாகத் தேவை!


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp