சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் (எக்ஸ்.ஏ,டி) தேர்வு ஜனவரி 5ம் தேதிக்கு நடத்தப்பட உள்ளது. மேலாண்மை நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு இந்தியாவில் உள்ள 44 நகரங்களிலும், வெளிநாடுகளில் 3 நகரங்களிலும் எக்ஸ்.ஏ.டி தேர்வு நடத்தப்படுகிறது.
எக்ஸ்.ஏ.டி தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டும் 106 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எக்ஸ்.ஏ.டி நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடத்தப்பட்டது.
3 மணி நேரம் நடைபெறும். இத்தேர்வு மொழி திறன், முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.xlri.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









