கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? - அமைச்சா் ராஜ்மோகன் பதில்

பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக...

News image

செய்தி மக்கள் தொடர்புத் துறை

Updated On :26 நிமிடங்கள் முன்பு

பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பாடத் திட்டத்தில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள 9 பாடநூல்களை அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சா் ராஜ்மோகனிடம், தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதுவே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.