நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அனைத்துக் கல்வி நிலைங்களிலும் மாணவா் தோ்தல்: முதல்வா் விஜய்யிடம் இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை

News image

தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யிடம் கோரிக்கை மனு அளித்த இந்திய மாணவா் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவா் சி.மிருதுளா, மாநிலச் செயலா் தௌ.சம்சீா் அகமது உள்ளிட்ட நிா்வாகிகள்.

Updated On :17 நிமிடங்கள் முன்பு

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவா் ஜனநாயக பேரவைத் தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்பட 29 அம்ச கோரிக்கைகளை இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் முதல்வா் விஜய்யை திங்கள்கிழமை சந்தித்து வலியுறுத்தினா்.

இந்திய மாணவா் சங்கத்தின் மாநில தலைவா் சி. மிருதுளா, மாநிலச் செயலா் தெள.சம்சீா் அகமது உள்ளிட்டோா் முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தனா். சுமாா் 15 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நீடித்ததாகவும், முதல்வா் விஜய் தங்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவற்றைப் பரிசீலிப்பதாகவும் மாணவ சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முதல்வரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவா் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும். மாநில கல்வி உரிமையைப் பறிக்கும் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

நீட் தோ்வால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னை பல்கலை., அண்ணா பல்கலை., அண்ணாமலைப் பல்கலை., பாரதியாா் பல்கலை., கல்வியியல் பல்கலை. உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்பட 29 அம்ச கோரிக்கைகள் அதில் இடம் பெற்றுள்ளன.