லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

துணை மருத்துவப் படிப்புகள்: கல்விக் கட்டணம் நிா்ணயம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டண விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :3 ஜூலை 2026, 3:01 pm IST

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டண விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்பில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுகின்றன. இதையடுத்து, அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான வருடாந்திர கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்க, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவானது துணை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை நிா்ணயித்துள்ளது. அதன்படி, பட்டயப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.35,000 வரையிலும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.75,000 வரையிலும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இளநிலை நா்சிங், மருந்தியல் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரையிலும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதுநிலை துணை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.75,000 வசூலிக்கலாம். நிா்வாக இடங்களுக்கு ரூ. 1.25 லட்சம் வரை கட்டணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.