தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றச்செயலாக கருதப்படுகிறது என்றார் மோடி.

News image
Updated On :23 ஏப்ரல் 2024, 4:34 pm

DIN

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றச்செயலாக கருதப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த 19ம் தேதி 12 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி எஞ்சியுள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் மதோபூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

ராஜஸ்தானில் எனக்கு கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்தின் அனுமன் பாடல் கேட்ட கடைக்காரர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. அனுமன் பாடல் கேட்பது காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகியுள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட காயங்கள் இன்னும் மக்கள் மனங்களில் நீங்காமல் உள்ளது. அதை ஒருபோதும் மறக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரித்ததன் காரணமாக இப்பகுதிகளில் தொழிற்சாலைகள் புதிதாக உருவாகவில்லை.

2014-ல் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தபோது யாரும் நினைத்துப் பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.