திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் டெம்போக்களில் பணம் பெற்றதாக எழுப்பிய குற்றச்சாட்டில் எப்போது விசாரணை தொடங்குவீர்கள்? என்று ராகுல் கேள்வி.

News image
Updated On :14 மே 2024, 12:31 pm IST

நாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு குத்தகைக்கு வழங்க எத்தனை டெம்போக்களில் ஊழல் பணத்தை வாங்கினீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை லக்னெள விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.

அப்போது லக்னெள விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சிறு காணொளியை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நாட்டு மக்களின் சொத்தான லக்னெள, மும்பை, மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், குவாஹாட்டி உள்ளிட்ட 7 விமான நிலையங்களை உங்களின் ‘டெம்போ’ நண்பருக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்குவிட எவ்வளவு ஊழல் பணத்தை வாங்குனீர்கள் என்று ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

விமான நிலையத்தில் இருந்த அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்தின் விளம்பரப் பதாகைகளையும் சுட்டிக் காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Story image

மேலும், அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் டெம்போக்களில் பணம் பெற்றதாக மோடி எழுப்பிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு, “அமலாக்கத்துறை, சிபிஐ-யில் விசாரணையை எப்போது தொடங்க போகிறீர்கள்? சீக்கிரம் விசாரணையை ஆரம்பியுங்கள்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரேபரேலியில் உள்ளுர் சலூன் கடையில் ராகுல் காந்தி அவரது தாடியை டிரிம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.