
காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் ஊழலின் பொருள்கள் என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்தார்.
ஹிமாசலப் பிரதேசம் ஹமீர்பூர் பகுதியில் அமைச்சர் அனுராக் தாக்குர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தபோது சீனாவுடன் மறைமுகமாக தொடர்பில் இருந்தது காங்கிரஸ்.
சீனாவில் இருந்து காங்கிரஸ் எவ்வளவு பணம் பெற்றுள்ளது? இதற்கான ஒப்பந்தங்கள் பின்வாசல் வழியாக கையெழுத்திடப்பட்டன. இதனை பொதுவெளியில் ராகுல் காந்தியால் கூற முடியுமா?
ஊழலின் பொருள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள். அவற்றிற்கு மக்கள் மீது அன்பும் நம்பிக்கையும் இல்லை. பணத்தை கொள்ளையடிக்கவும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் மட்டுமே அவர்கள் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்.
நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை அரசியலிலிருந்து தூக்கியெறிவார்கள் எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.