மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி சனிக்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்பு மனுவில் அவரது சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், சுந்தர். சி பெயரில் ரூ.2.97 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், மனைவி குஷ்பு பெயரில் ரூ.6.06 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர். சியிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.20.82 கோடியாகவும், குஷ்புவிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.16.79 கோடியாகவும் உள்ளன.
மேலும் சுந்தர்.சி பெயரில் ரூ.4.12 கோடி கடனும், குஷ்பு பெயரில் ரூ.2.74 கோடி கடனும் உள்ளன. சுந்தர்.சியிடம் கையிருப்பாக உள்ள தொகை - ரூ.50,600. குஷ்புவிடம் கையிருப்பாக உள்ள தொகை - ரூ.30,000 ஆகும்.
சுந்தர்.சியிடம் 3 கார்களும், குஷ்புவிடம் ஒரு காரும் உள்ளது. குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் களமிறங்குகிறார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கும் அவர், மனைவி குஷ்புவுடன் சென்று மதுரை மத்திய தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
Summary
The asset details of Sundar C, who is contesting in the Madurai Central constituency, have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிக்கமாட்டேன்: சுந்தர். சி

குஷ்புவைத் தொடர்ந்து சுந்தர். சி! மதுரை மத்திய தொகுதியில் போட்டி!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



