சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

சர்வாதிகாரியாகத் துடிக்கிறது மத்திய அரசு: அமைச்சர் துரைமுருகன்

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image

கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன். உடன் திமுக கட்சியினர்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:12 pm IST

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவர் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், கொடிக்கம்பத்தில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு தொகுதி மறுவரை மசோதாவின் நகலை அவர் தீயிட்டு கொளுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிக்கிறது. எந்த மாநிலத்தின் தயவும் இல்லாமல் தாங்கள் விரும்பிய சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நினைக்கிறது.

இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க விடாமல், சிறிது சிறிதாக ஒற்றை நாடாக மாற்றப் பார்க்கின்றனர். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு சர்வாதிகாரியாக இருக்கத் துடிக்கிறார்கள். இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்தால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள்.

ஐந்து மாநில பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் இந்தச் சூழலில், இந்த மசோதாவைக் கொண்டு வருவது அவசியமா என மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. இதற்குக் காரணம், பாஜக விரித்த வலையில் அதிமுக முழுமையாக மாட்டிக்கொண்டுள்ளது” என்றார்.

முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Summary

Minister Duraimurugan has sharply criticized the Central Government, alleging that it is eager to transform into a dictatorship after burying democracy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.