காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திமுக சின்னமும் மதிமுக வேட்பாளரும்!

திமுக சின்னமும் மதிமுக வேட்பாளரும்!

News image

கருணாநிதி, வைகோ

Updated On :22 மார்ச் 2026, 3:56 am IST

தென்காசி பேரவைத் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதிமுக வேட்பாளருக்கு திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்த சம்பவம் நடைபெற்றது.

வழக்கமாக தேர்தலின்போது, பிரதான கட்சி வேட்பாளரின் பெயரைக் கொண்ட பலரும் வேட்புமனு தாக்கல் செய்து குளறுபடிகளை ஏற்படுத்துவது சுவாரஸ்யமாக இருக்கும். அதுபோன்று சம்பவம்தான் தென்காசி தொகுதியிலும் 2006-ஆம் ஆண்டு நடைபெற்றது.

இங்கு திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் அப்போதைய மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக சார்பில் இராம உதயசூரியன் பம்பரம் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இதனால், வீ. கருப்பசாமிபாண்டியன் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் மேற்கொண்டபோது, அவரது கட்சியின் சின்னத்தை மட்டுமன்றி எதிர்க்கட்சி வேட்பாளரையும் குறிப்பதாக இருந்தது. அந்தத் தேர்தலில் வீ.கருப்பசாமிபாண்டியன் 69,755 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இராம. உதயசூரியன் 51,097 வாக்குகள் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.