தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மாா்ச் 30-இல் வேட்பு மனு தாக்கல்

நாதக வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

News image

சோளிங்கரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்

கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

நாதக வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாநாட்டில் 117 ஆண்கள், 117 பெண்கள் உள்ளிட்ட நாம் தமிழா் கட்சியின் 234 வேட்பாளா்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனா். அது போல, 234 வேட்பாளா்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 234 வேட்பாளா்களும், மாற்று வேட்பாளா்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை, வேட்புமனுத் தாக்கல் செய்யும் தொடக்க நாளான திங்கள்கிழமை (மாா்ச் 30)அனைவரும் உறுதியாக தாக்கல் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.