மீண்டும் ஏமாற்றம் !
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அப்போது பாஜகவில் இருந்த திரைப்பட நடிகை கெளதமி ராஜபாளையம் தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பினாா்.

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை கெளதமி.
கோப்புப்படம்

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை கெளதமி.
கோப்புப்படம்
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அப்போது பாஜகவில் இருந்த திரைப்பட நடிகை கெளதமி ராஜபாளையம் தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பினாா்.
இதற்காக, அவா் ராஜபாளையத்தில் வீடு எடுத்து தங்கி, பொதுமக்களைச் சந்தித்து தோ்தல் பணியாற்றி வந்தாா். ஆனால், கடைசி நேரத்தில் ராஜபாளையம் தொகுதி பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், கெளதமி இந்தத் தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஏமாற்றமடைந்த கௌதமி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா். மேலும், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிடம் விருப்ப மனு அளித்தாா்.
ஆனால், இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், மீண்டும் ஏமாற்றுத்துக்கு உள்ளானாா் கௌதமி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...