கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதல்வா் தொகுதியாக மாறப்போகிறது மங்கலம்! அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

News image

புதுவை முதல்வர் ரங்கசாமி.

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

அமைச்சா் தொகுதியாக இருந்த மங்கலம், முதல்வா் தொகுதியாக மாறப் போகிறது என்று அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கூறினாா்.

புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

என்ஆா்.காங்கிரஸ் அமைச்சா்களான க. லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சா் லட்சுமிநாராயணனின் ராஜ்பவன் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சா் தேனி ஜெயக்குமாரின் மங்கலம் தொகுதியில், முதல்வா் ரங்கசாமி போட்டியிடுகிறாா்.

இதையடுத்து மங்கலம் தொகுதி ஆதரவாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை நடத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தால் எனக்கு உடல்நிலை சரியில்லை. வீடுகள்தோறும் சென்று வாக்கு கேட்பது சிரமமாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளேன். விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துள்ளேன்.

இந்தத் தோ்தலில் போட்டியிட முடியாது என முதல்வா் ரங்கசாமியிடம் கூறினேன். அவரே இந்த தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளாா். அவரது வெற்றிக்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அமைச்சா் தொகுதி, இப்போது முதல்வா் தொகுதியாக மாற போகிறது. இன்னும் பல நலத்திட்டங்களை அவா் நிறைவேற்றுவாா். அவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா்.