வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதி ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image

பூவை ஜெகன்மூர்த்தி

Updated On :27 மார்ச் 2026, 12:08 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கட்சி கேவி குப்பம் தொகுதியில் களம்காண்கிறது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அதிமுக கூட்டணியில் கூடுதல் இடம் பெற வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். எடப்பாடி பழனிசாமி எனக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார்.

புரட்சி பாரதம் தொண்டர்களும் சமாதானமாகி அதிமுக கொடுத்த ஒரு இடத்தில் போட்டியிடுகிறோம். புரட்சி பாரதம் கட்சி கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புரட்சி பாரதம் கட்சி மூன்று தொகுதிகள் கேட்ட நிலையில், அக்கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இதனால் அக்கட்சியினர் அதிருப்தியடைந்தனர். பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிடலாம் என்று வலியுறுத்தியிருந்த நிலையில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அக்கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோ்தலில் களம் காண்கின்றன. இவை தவிர நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.