சேப்பாக்கத்தில் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி போட்டி!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவது குறித்து...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
(கோப்புப் படம்)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
(கோப்புப் படம்)
தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக தலைமையில் நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.
இதையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில், திமுகவின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாறுவதாகவும், திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், வரும் தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடும் 164 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2 ஆவது முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் முதல்முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்றதுடன், 69,300-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.
மேலும், கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...