கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அந்த நாள் ஞாபகம்... சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்!

25 வயதில் அரசியல் வாழ்வைத் தொடங்கி, தற்போது 72 வயதிலும் களப் பணியாற்றி வருபவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற சிறப்புக்குரியவர் சேந்தமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்.

News image

சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்.

Updated On :22 மார்ச் 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

25 வயதில் அரசியல் வாழ்வைத் தொடங்கி, தற்போது 72 வயதிலும் களப் பணியாற்றி வருபவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற சிறப்புக்குரியவர் சேந்தமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்.

தன்னுடைய அனுபவம் குறித்து அவர் கூறியது: என்னுடைய சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு கிராமம். அப்போதைய அதிமுக மாவட்டச் செயலரான சேலம் கண்ணன் மூலம் எம்ஜிஆரை சந்தித்தேன். 1977 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1980-இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

அப்போது எம்ஜிஆர் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலில் 37,577 வாக்குகளுடன் வெற்றி பெற்றேன். கொல்லிமலை அடிவாரப் பகுதியான காளப்பநாயக்கன்பட்டியில் தங்கியிருந்து மக்கள் பணியாற்றினேன்.

முதல் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எம்ஜிஆரை சந்தித்தபோது கட்டியணைத்து வாழ்த்து கூறினார். தமிழக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தபோது அங்கிருந்த தலைவர்களைப் பார்த்து மிரட்சியடைந்தேன். எனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டபோதெல்லாம் எம்ஜிஆர் மறுக்காமல் செய்துகொடுத்தார்.

அதன்பிறகு, 1984-இல் இரண்டாவது முறை போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். அப்போது 54,129 வாக்குகளுடன் வெற்றி பெற்றேன். 1987-இல் எம்ஜிஆர் மறைவையடுத்து, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 1989-இல் அதிமுக பிளவுபட்டபோது, ஜானகி அணியில் இணைந்தேன். அப்போது, திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பழங்குடியினருக்கான தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெற்றி பெற முடியவில்லை.

அதன்பிறகு, ஜானகி அணியிலிருந்து பிரிந்து திருநாவுக்கரசர் தொடங்கிய அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தேன். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டபோது, ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது, பிரசாரத்திற்கு நான் சென்ற நிலையில், காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள என்னுடைய வீட்டை தீ வைத்து எரித்துவிட்டனர். மனைவி, மகன், மகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அந்தத் தேர்தலில் 7,316 வாக்குகள் மட்டுமே பெறமுடிந்தது.

இதைத் தொடர்ந்து, அரசியலில் பட்டும்படாமல் இருந்த நிலையில், 1998 காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். 2019-இல் பாஜகவில் இணைந்தேன். தற்போது தேசியப் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன் என்றார் சிவப்பிரகாசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.