பாஜக ஆட்சிக்கு வந்தால், யாராலும் ஊடுருவ முடியாது என மேற்கு வங்கம், ஹூக்ளி மாவட்டத்தின் பாலகர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த நாளில், ஹூக்ளி மாவட்டத்தின் பாலகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இன்று, முதல் கட்ட வாக்குப்பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்டது. மேலும் இது மேற்கு வங்கம் முழுவதும் நான் நடத்தும் 30-ஆவது நிகழ்ச்சியாகும்.
மே 5 ஆம் தேதி, மமதா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வரும். வங்காளத்தில் முழுப் பெரும்பான்மையுடன் பாஜகவின் ஆட்சி அமைக்கும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்துக்குள் ஒரு ஊடுருவல்காரர் கூட நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே, இங்குள்ள சட்டவிரோத குடியேறிகள் வேரோடு அகற்றப்படுவார்கள்.
மேலும், ஊடுருவல்காரர்கள் மேற்கு வங்க இளைஞர்களின் வேலைகளையும், ஏழைகளின் உணவுப் பொருள்களையும் அபகரித்து, நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ரிஷப் ஷெட்டி!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

