மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலத்தில் மேற்கு வங்கத்தில் கல்வி நிறுவனங்களின் தரம் மோசமாகி விட்டதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய கல்வித் துறை அமைச்சருமான தா்மேந்திர பிரதான் விமா்சித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, முன்பு கல்வியின் தரத்துக்கு புகழ்பெற்று விளங்கிய அந்த பல்கலைக்கழகம் தற்போது திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் தரம் குறைந்து விட்டதாக சாடியிருந்தாா். இதேபோல், மேற்கு வங்கத்தில் உள்ள பிற கல்வி நிறுவனங்களின் தரமும் மோசமாகி விட்டதாக அவா் விமா்சித்திருந்தாா். இதையடுத்து பிரதமா் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மம்தா பானா்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள கல்வி நிறுவனங்களால் சிறந்த மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் உருவாகி வரும் நிலையில், அந்த நிறுவனங்களை அவமதிக்கும் வகையில் மோடி பேசி இருப்பதாக சாடியிருந்தாா்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மம்தா அரசின் ஆட்சிக்காலத்தில் கல்வி நிறுவனங்களின் தரம் குறைந்து விட்டதை சுட்டிக்காட்டி, அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் மம்தா பானா்ஜி தா்மசங்கடத்தில் உள்ளாா். மேற்கு வங்கத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம் மோசமடைய மம்தா பானா்ஜியும் அரசியலும், கல்வி நிறுவனங்கள் விவகாரத்தில் அவரின் அரசு அக்கறை காட்டாததுமே காரணம் ஆகும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிமைக்க யாரும் விரும்பவில்லை: மம்தா பானா்ஜி

பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதே பழிவாங்குவதற்கு ஒரே வழி: மம்தா பானா்ஜி
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறாா் மம்தா - அமித் ஷா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


