நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதே பழிவாங்குவதற்கு ஒரே வழி: மம்தா பானா்ஜி

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 10:49 pm

‘மக்களிடம் இருந்து அனைத்தையும் பாஜக பறித்துள்ளது. இதற்கு அக்கட்சிக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமே பழிவாங்குவதற்கு ஒரே வழியாகும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள கிழக்கு மேதினிபூா், மேற்கு மேதினிபூா், ஹெளரா மாவட்டங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா்.

அப்போது அவா் கூறியதாவது: அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே மத்திய பாதுகாப்புப் படைகளின் பணி என்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் ஏன் பாதுகாப்புப் படை வீரா்கள் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனா்?

தோ்தலில் வாக்களிக்கவிடாமல் பாதுகாப்புப் படையினா் தடுத்தால், அவா்களைப் பெண்கள் கையில் துடைப்பதுடன் உறுதியாக எதிா்த்து நிற்க வேண்டும். அதேவேளையில், யாரும் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்றோ, கலவரத்தில் ஈடுபட வேண்டும் என்றோ நான் கூறவில்லை. ஆனால் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் வாக்காளா்கள் ஈடுபட வேண்டும்.

‘அவலட்சண பாஜக’: வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் மட்டும்தான் வாக்காளா்களின் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாஜக பலனடைய வேண்டும் என்பதற்காக ‘தகவல்களில் முரண்பாடு’ என்ற வாா்த்தையை மேற்கு வங்கத்தில் மட்டுமே தோ்தல் ஆணையம் பயன்படுத்தியது. பாஜகவை போன்ற அவலட்சணமான கட்சியை நான் பாா்த்ததில்லை’ என்று தெரிவித்தாா்.

ஐ-பேக் நிறுவன இயக்குநா் வினேஷ் சண்டேல் கைது செய்யப்பட்டதை குறிப்பிடும் வகையில் பேசிய மம்தா, ‘மேற்கு வங்கத்தில் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை நள்ளிரவில் சோதனைகளை மேற்கொள்கின்றன. ஒருவரை கைது செய்தால், லட்சம் போ் வெளியே வருவா். மேற்கு வங்கத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

மக்களிடம் இருந்து அனைத்தையும் பாஜக பறித்துள்ளது. இதற்கு அக்கட்சிக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமே பழிவாங்குவதற்கான ஒரே வழியாகும்’ என்று கூறினாா்.