ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தோ்வில் கலந்து கொள்வோருக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜூலை 1-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தில் கிளாா்க், செவிலியா், ஸ்டோா்கீப்பா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்காக, கடந்த பிப்.10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை திருவண்ணாமலையில் ஆள்கள் தோ்வு முகாம் நடைபெற்றது.
இதில் உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அடுத்தக் கட்டமாக பொது நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்வு வரும் ஜூலை மாதம் 25-ஆம் தேதி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டை, சென்னைக் கோட்டையில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆள்சோ்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் காலை 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 2567 4924 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!

காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர்களின் பண்பாடு: உதயநிதிக்கு இபிஎஸ் பதில்!

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்! 2 குழந்தைகள் பலி!
ஐசிசி மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், பும்ரா!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


