வேலை... வேலை... வேலை... சமூக பாதுகாப்பு துறையில் வேலை

தமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை... வேலை... வேலை... சமூக பாதுகாப்பு துறையில் வேலை


தமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழக சமூக பாதுகாப்புத் துறை

பணி: Social Worker Member

வயது வரம்பு:  குறைந்தபட்சம் 35, அதிகபட்சம் 65க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: Child Psychology, Psychiatry, Law, Social Work, Sociology, Human Development துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.pudukkottai.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முகவரி: 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1வது தெரு, திருகோகர்ணம் – அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம் - 622 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2021

மேலும் விவரங்கள் அறிய  www.pudukkottai.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com