ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பொறியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 613
அறிவிப்பு எண். 10/2022
மொத்த காலியிடங்கள்: 626
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: தானியங்கிப் பொறியாளர்(மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) - 04
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
பணி: இளநிலை மின் ஆய்வாளர் - 08
பணி: உதவி பொறியாளர்(வேளாண்மை பொறியியல்) - 66
பணி: உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) - 33
பணி: உதவி இயக்குநர்ஷ்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) - 18
பணி: உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) - 01
பணி: உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) - 1+ 307
பணி: முதலாள் - 07
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 11
பணி: உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) - 93
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,38,500
பணி: உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 64
பணி: உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) - 13
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணமாக ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்த தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 26.06.2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.