பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி வேலை: சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி வேலை: சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 145

பணி: மேலாளர்  (ரிஸ்க்) -  40
பணி: மேலாளர் (கிரடிட்) - 100

தகுதி: கணக்கு தணிக்கையாளர் (சிஏ) அல்லது ஏதாவதொரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று  நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி கருவூலம் பணிக்கு 25 முதல் 37க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 25 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com