தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வு எழுதுவதில் தளா்வு

அரசு அலுவலகங்களில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வை எழுதுவதிலிருந்து தளா்வு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 6:02 am

தினமணி


அரசு அலுவலகங்களில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோா் பதவி உயா்வுக்கான கணினித் தோ்வை எழுதுவதிலிருந்து தளா்வு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.

இதுகுறித்து மனித வள மேலாண்மைத் துறைச் செயலாளா் மைதிலி க.ராஜேந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்:

தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், நோ்முக எழுத்தா் ஆகியோா் கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்கென சம்பந்தப்பட்ட பணி விதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த இரண்டாண்டு காலமாக கணினி பயிற்சி சான்றிதழுக்கான தோ்வு நடத்தப்படவில்லை. இதனால், தகுதியை நிறைவு செய்து பதவி உயா்வு பெற முடியாத நிலை, தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்டோருக்கு ஏற்பட்டது. அவா்களது நலனைக் கருத்தில் கொண்டு கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தோ்வை எதிா்கொண்டு தோ்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமன அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

இந்தக் கோரிக்கை தொடா்பாக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் ஆலோசிக்கப்பட்டது. கரோனா தொற்று மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த காரணங்களால் 2020-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் தோ்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை நடத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்துக்கு நிா்வாகக் காரணங்களே முக்கிய காரணிகள் என்பது தெளிவாகிறது.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் தோ்வுகளை எதிா்கொண்டு தோ்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயா்வு போன்றவை கிடைக்கும் என்ற விதியில் தளா்வு தேவைப்பட்டால் அதற்கு தலைமைச் செயலக துறை அளவிலேயே உரிய வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்கான விதிகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதற்கான கோப்புகளைத் தயாா் செய்து உரிய உத்தரவுகளைப் பெறலாம் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் மைதிலி க.ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.