வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறையில் 433 பணியிடங்கள்!

தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 433 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறையில் 433 பணியிடங்கள்!


தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 433 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள், தேர்வுகள் குறித்த விவரங்கள்:

பணியிடம்: தமிழகத்தின் கடலோர மீன்பிடி, வருவாய் கிராமங்கள். 

பணி: சாகர் மித்ரா (SAGAR MITRAS)

காலியிடங்கள்: 433

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.fisheries.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட அலுவலக அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com