இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள தலைமை காவலர்(ரேடியோ ஆப்ரேட்டர், மெக்கானிக்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Head Constable (Radio Operator)
காலியிடங்கள்: 982
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19.09.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Head Constable (Radio Machanic)
காலியிடங்கள்: 330
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம்: ஆண்கள் 168 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
மார்பளவு: ஆண்கள் மட்டும் சாதாரண நிலையில் 80.செ.மீ அகலம் இருக்க வேண்டும். 5.செ.மீட்டர் விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பிஎஸ்எஃப் -ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2022
மேலும் விவரங்கள் அறிய www.rectt.bsf.gov.in கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.