ரயில்வேயில் வேலை வேண்டுமா?-10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

தென் மத்திய ரயில்வேயில் விளையாட்டுப் பிரிவின் கீழ் குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வேயில் வேலை வேண்டுமா?-10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! 


தென் மத்திய ரயில்வேயில் விளையாட்டுப் பிரிவின் கீழ் குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 21

நிர்வாகம் : தென் மத்திய ரயில்வே 

பணி : விளையாட்டுப் பிரிவு குரூப் 'சி'

சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.20,200

தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் கலந்துகொண்டு சாதனை படைத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : www.scr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.500. எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர் கள் விளையாட்டு சோதனைகள், விளையாட்டு சாதனைகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022 

மேலும் விவரங்களை அறிய www.scr.indianrailways.gov.in அல்லது https://www.ifinish.in/rrc_scr_sports/pdfs/sports.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com