தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பாதுப்பு அலுவலர் - 02
சம்பளம்: மாதம் ரூ.21,000
பணி: சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் - 01
சம்பளம்: மாதம் ரூ.21,000
பணி: ஆற்றுப்படுத்துநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணி: சமூகப்பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணி: கணக்காளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணி: தகவல் பகுப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.14,000
பணி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: புறத்தொடர் பணியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.8,000
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்று கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி பெற்று ஒரு ஆண்டு அனுபவம் பெற்றவர்கள், குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியலாளர், சமூகப்பணி, சமூகவியல், வழிக்காட்டுதல், ஆற்றுப்படுத்துதல், மருத்துவ மனநலம், பி.எல், எல்.எல்.பி, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://tenkasi.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்(பொ), அரசினர் குழந்தைரகள் இல்லம், கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி, (இருப்பு) நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி - 627854
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030799.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.