தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? - விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப்படம்
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Clerk Cum Typist (Under Sports Quota)
காலியிடங்கள்: 05
சம்பளம்: 7ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க
தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி: வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், பல்கலைக்கழக அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது 3 ஆம் இடமாவது பெற்றிருக்க வேண்டும். 01.04.2019 தேதிக்கு பின்னர் விளையாட்டில் பெற்ற சாதனைகள் மட்டும் விளையாட்டுத் தகுதியாத கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டு தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, பெண்கள் ரூ.250, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Chennai. என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in அல்லது www.rrcmas.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway, Egmore, Chennai - 600 008.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






