தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோ்முகத் தோ்வு இல்லாத காலிப் பணியிடங்கள் என 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 117 இடங்களில் 4,021 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதமும், 2022 டிசம்பர், 2023 ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குருப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக, உத்தேச விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான தற்காலிக விடைகளை தனித்தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான வினாக்களுக்கான தற்காலிக, உத்தேச விடைகளை காண கீழ்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.
அரசு வெளியிட்டுள்ள இந்த விடைகளுக்கான முடிவுகளில் அட்சேபனை இருக்கும் தேர்வர்கள், கீழ்வரும் லிங்கில் சென்று ஜூன் 3-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மூன்று தேர்வுகளுக்குமான விடை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் பொது லிங்க் https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=9ebe752b-d3ed-4b6f-b9ba-02708064637c என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
Related Article
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

பேட்மிண்டன் விளையாடிய ஆதவ் அர்ஜுனா - அன்புமணி!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறிவைத்த Hackers | Dinamani
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



