கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மிஸ் பண்ணிடாதீங்க... மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பஞ்சாப் வங்கியில் பயிற்சி!

பொதுத்துறை வங்கியான பஞ்சால் நேஷ்னல் வங்கியில் மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

(கோப்புப்படம்)

Updated On :12 ஜூலை 2024, 9:40 am

DIN

பொதுத்துறை வங்கியான பஞ்சால் நேஷ்னல் வங்கியில் மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Apprentices

காலியிடங்கள்: 2700

தமிழ்நாட்டில் சென்னை - 29, கோவை - 13, திருச்சி 18 என 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உதவித்தொகை: மாதம் ரூ.10,000 முதல் 15,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: ஏதாவெதாரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுரம்பு, தகுதி ஆகியவை 30.6.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வானது 28.7.2024 ஆம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விவரம் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 மற்ற அனைத்து பிரிவினர்களும் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் முதலில் தங்களது கல்வித் தகுதியை குறித்த விவரங்களை www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.pnbindia.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.7.2024

இணையதளத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்தும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.