பொதுத்துறை வங்கியான பஞ்சால் நேஷ்னல் வங்கியில் மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Apprentices
காலியிடங்கள்: 2700
தமிழ்நாட்டில் சென்னை - 29, கோவை - 13, திருச்சி 18 என 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உதவித்தொகை: மாதம் ரூ.10,000 முதல் 15,000 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவெதாரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுரம்பு, தகுதி ஆகியவை 30.6.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வானது 28.7.2024 ஆம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விவரம் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 மற்ற அனைத்து பிரிவினர்களும் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் முதலில் தங்களது கல்வித் தகுதியை குறித்த விவரங்களை www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.pnbindia.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.7.2024
இணையதளத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்தும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. பொதுத்துறை வங்கிகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் வேலை: ஐபிபிஎஸ் அறிவிப்பு

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? - சிஏ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay




