15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மிஸ் பண்ணிடாதீங்க... மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 எம்டிஎஸ் மற்றும் ஹவால்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)

Updated On :11 ஜூலை 2024, 2:51 pm IST

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 எம்டிஎஸ் மற்றும் ஹவால்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi Tasking Staff (MTS) (Non-Technical)

காலியிடங்கள்: 4887

சம்பளம்: 7- ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Havaldar(CBIC & CBN)

காலியிடங்கள்: 3439

சம்பளம்: 7- ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.8.2024 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி -ஆல் நடத்தப்படும் ஆன்லை வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் கொள்குறி வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். தாள்-2 -இல் ஆங்கில மொழியில் கட்டுரைகள், கடிதம் எழுதுவது போன்ற விரிவாக விடை எழுதும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர், நவம்பர்- 2024

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர்.

உடற்தகுதி (ஹவால்தார்) ஆண்கள்: குறைந்தபட்சம் 157.5 செ.மீ உயரம், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ இருக்க வேண்டும்.

பெண்கள்: குறைந்தபட்சம் 152 செ.மீ உயரமும், 48 கிலோ எடையும் இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதிகள் (ஹவால்தார்)

ஆண்கள்: 1600 மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.

பெண்கள்: ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.