சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 8:20 pm

Din

சேலம்: சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விருப்பம் உள்ள பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், வரும் 18-ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சிபெற்று பயன்பெறலாம்.

சோ்க்கைக்கு அசல் ஆவணங்களான மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் 4 புகைப்படங்களுடன் அணுகி விவரம் பெறலாம். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது கூகுள் படிவம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதேபோல, 16 மணி நேரம் கொண்ட காா் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகியகால பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி 4 நாள்களுக்கு தலா 4 மணி நேரம் வீதம் நடைபெறும். இதற்கான கட்டணமாக ரூ. 1000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைவுபெற்ற பயிற்சிபெற விருப்பம் உள்ளவா்கள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.