தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி

தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (என்எஸ்எப்டிசி) காலியாக உள்ள பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி
Published on
Updated on
1 min read

தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (என்எஸ்எப்டிசி) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NSFDC/HR/Rectt./151/2025

பணி: Assistant General Manager

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

தகுதி : கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக தகுதியுடன் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபுள்யுஏ, எல்எல்பி முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

வயது வரம்பு : 42-க்குள் இருக்கவேண்டும். இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர் தகுதியுடன்.

பணி: Assistant Manager

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

தகுதி : பி,காம் , எம்.காம் தேர்ச்சி மற்றும் சிஏ, ஐசிடபுள்யுஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Junior Executive

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.26,000 - 93,000

தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவமும், ஹிந்தியில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Junior Executive (Finance)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 26,000 - 93,000

தகுதி : வணிகவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பணி எண் 1-க்கு ரூ.600, பணி எண் 2 மற்றும் 3-க்கு ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nsfdc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.4.2025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com