சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

தமிழக சுகாதாரத் துறையில் 1100 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்

Updated On :10 டிசம்பர் 2025, 12:35 pm IST

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பணி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) (Assistant Surgeon (General))

காலியிடங்கள்: 1,100

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொது பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ. 1000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 11.12.2025

Summary

Tamilnadu MRB has released the Job notification to fill the 1100 Assistant Surgeon (General) Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.