மெட்ரோ ரயில் கழகத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

கொல்கத்தா மெட்ரோ கழகத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கொல்கத்தா மெட்ரோ கழகத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். MRTS/E-373/Trade Apprentice/PT-VI

பயிற்சி: Trade Apprentice

காலியிடங்கள்: 128

வயதுவரம்பு: 22.1.2025 தேதியின்படி 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிசன், பிட்டர், வெல்டர், மெஷினீஸ்ட் ஆகிய ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.indi.org என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்தவுடன் www.mtp.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.2.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X