அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
Updated On :7 மே 2025, 8:28 pm

Din

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் துறையில் அரசு அல்லது தன்னாா்வ தொண்டு நிறுவனம் அல்லது சட்ட விஷயங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றிய நல்ல புரிதல் இருத்தல் வேண்டும். 42 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருக்கக் கூடாது. தொகுப்பூதியமாக மாதம் ரூ. 27,804 வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்களை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, புகைப்படம் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து 15 நாள்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு, எண்.1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூா், சென்னை - 600016 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளாா்.