விண்ணப்பிக்கலாம் வாங்க... திருச்சி ஐஐஎம் ஆராய்ச்சிப் பணி!

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாகவுள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சி
இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சி
Published on
Updated on
1 min read

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாகவுள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Staff

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: வணிகவியல், பொருளாதாரம், மேலாண்மை, புள்ளியியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிய எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.5.202

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com