திருப்பத்தூா்: அக். 17-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோப்புப்படம்

திருப்பத்தூா்: அக். 17-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (அக். 17) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (அக். 17) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 17) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆள்களை தோ்வு செய்ய உள்ளன. இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, ஐடிஐ டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com