
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் 4,662 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தோ்வு கடந்த ஜூலை 12 -ஆம் தேதி நடைபெற்றது.
இதில் 13.89 லட்சம் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்த நிலையில், 11.48 லட்சம் போ் தோ்வு எழுதினா்.
இந்நிலையில், குரூப் 4 தோ்வுக்கான முடிவுகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியானது.
மேலும், கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கான அழைப்பு மற்றும் கலந்தாய்வு தேதி குறித்து விவரம் விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாக நான்கு மாதங்கள் ஆன நிலையில், இந்தாண்டு 102 நாள்களில் வெளியிடப்பட்டுள்ளது தேர்வர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.