ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணி
Published on

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 58,100

தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும்.

பணி : ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 71,900

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnrd.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025

Summary

GOVERNMENT OF TAMILNADU RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ DEPARTMENT Application for the Vacant Post at Panchayat Union Level

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com