எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு...

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 11:02 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் நல்லூா் வட்டாரத்தில் 2, ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தில் 1 என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் குடியிருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 மாத எம்.எஸ். - ஆபிஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுநா் உரிமம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ.12,000 ஆகும்.

விண்ணப்பதாரரின் சுய விவரம், கல்வி தகுதிச் சான்றிதழ் நகல் உள்ளிட்டவைகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், ஜி.எச் சாலை, பூமாலை வணிக வளாகம் கட்டடம், மஞ்சக்குப்பம், கடலூா் - 607 001 என்ற முகவரிக்கு நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94440 94258, 93613 40247 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.