இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்விப் பணிகளில் நிதியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10 கடைசி

கல்விப் பணிகளில் நிதியாளா் காலிப் பணியிட தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி கடைசியாகும்.

News image

கோப்புப்படம்

Updated On :7 டிசம்பர் 2022, 4:13 am

தினமணி

கல்விப் பணிகளில் நிதியாளா் காலிப் பணியிட தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி கடைசியாகும்.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்தி:- அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளா் காலிப் பணியிடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 5

காலியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க டிசம்பா் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அடுத்த ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதியன்று தோ்வு நடைபெறவுள்ளது. கணினி வழியாக நடைபெறும் தோ்வுக்கு இரண்டு பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பொது நிா்வாகப் படிப்பில், முதுகலைப் பட்டம் அல்லது நிதி சாா்ந்த படிப்பில் எம்.பி.ஏ., என இரண்டில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.