
தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7.12.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்)
பணி: கால்நடை ஆலோசகர் - 1
பணியிடங்கள்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவி.
தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்சி., மற்றும் ஏஎச் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு குறித்த விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்
சம்பளம்: தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்: தகுதியானவர்கள் 07.12.2022 அன்று காலை 11 மணிக்கு வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், வேலூர்-9 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.